நாளை முதல் அடுத்த ஒரு வாரம்: வடக்கு - கிழக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே நாளை தினம் (15-12-2023) காற்றுச் சுழற்சி உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல பகுதிகளில் கனமான மற்றும் மிகக் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த காற்றுச் சுழற்சி நாட்டின் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் நகர்வுப் பாதை தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னரே உறுதியாகக் கூற முடியும்.
இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இக் கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த மழை நாளை (15) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.