அடுத்து ராஜபக்ஷக்களுக்கு செக் வைக்கும் NPP அரசாங்கம்!
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக நடவடிக்கை
ரணிலுக்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார். கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை. அதன் பிரகாரமே ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலும் விரைவில் விசாரணை நடத்தப்படும். அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் வழங்கியுள்ள ஆணையில், இது முக்கியமான விடயமாகும். அதனை நிறைவேற்றுவோம் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.