நாட்டிற்குள் புதிய வைரஸ் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம்
நாட்டிற்குள் புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நுழைவதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாடு இப்போது சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதுடன் துறைமுகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் , புதிய வைரஸ் வகைகள் நாட்டிற்குள் நுழைந்தால் கணிக்க முடியாததாக ஆபத்துக்களை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
எனவே முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம்.
தற்போதைய நிலவரப்படி, மொத்த மக்கள் தொகையில் சுமார் 67 சதவிகிதம் பேர் கோவிட் தடுப்பூசியின் ஒற்றை டோஸைப் பெற்றுள்ள அதே நேரத்தில் 58 சதவிகிதம் பேருக்கு இரண்டு அளவுகளும் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் நாம் திருப்திகரமான நிலையை அடைய வேண்டுமானால், மொத்த மக்கள்தொகையில் 70 முதல் 80 சதவிகிதம் வரை தடுப்பூசி போடுவது முக்கியம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.