சுட்டுக்கொல்லபட்ட வெலிகம தவிசாளரின் பதவிக்கு புதியவர் நியமனம்
வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே அவர் குறித்த பிரதேச சபையின் தவிசாளராக தெரிவாகியுள்ளார்.
வெலிகம பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய லசந்த விக்ரமசேகர கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பிரதேச சபையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அதனைத் தொடர்ந்து அப்பதவி வெற்றிடமானது.

சுட்டுக்கொல்லப்பட்ட தவிசாளர்
இந்நிலையில் இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே சிந்தக்க ஹேவா பதிரணபிரதேச சபையின் தவிசாளராக தெரிவாகியுள்ளார்.
வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதன்படி, ஒரு மேலதிக வாக்கினால் வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
வெலிகம பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய லசந்த விக்ரமசேகர கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பிரதேச சபையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ அறையில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அப்பதவி வெற்றிடமாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.