பதவி ஏற்ற கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர்
கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தாசர் இன்று (18) பதவி ஏற்றுள்ளார்.
2025 உள்ளூராட்சித் தேர்தலில் அதிகம் அவதானம் செலுத்தப்பட்ட வேட்பாளராக இருந்த தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர், நேற்று முன்தினம் (16) கொழும்பு மாநகர சபையின் மேயராக பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற ஊடகங்களிடம் அவர் கூறுகையில்,
கொழும்பு மக்களுக்கு வெளிச்சம்
கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், தனது வெற்றி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும் என்றும் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு இலங்கையின் பணக்கார நகரமாக இருந்தாலும், அதன் இருண்ட பக்கம் இப்போது கொழும்பை மூழ்கடித்துள்ளதாக கூறிய அவர், நகரத்தில் வாழும் மக்களுக்கு வெளிச்சம் வழங்குவதில் தனக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஒழுங்கற்ற திட்டங்கள் காரணமாக கொழும்பில் பல பெரிய பிரச்சினைகள் இருப்பதாகவும், அவை அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஈரானின் வான்பரப்பு எங்களின் கட்டுப்பாட்டில்; கமேனி ஒழிந்துள்ள இடம் தெரியும்.... டிரம்ப் பதிவால் பரப்ரப்பு
கொழும்பு நகரத்தை உலகின் மிகவும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்றும், கட்சி அல்லது நிற வேறுபாடின்றி 117 உறுப்பினர்களின் கூட்டுப் பணியிலேயே வெற்றி அடங்கியுள்ளது என்றும், இதற்கு ஆதரவளிக்குமாறும் கொழும்பு மேயர் கேட்டுக் கொண்டார்.