ஹரீன் மற்றும் மனுக்ஷவுக்கு புதிய பதவி; சீறிவிழும் அனுரகுமார
ஹரீன் பெர்ணான்டோ மனுக்ஷ நாணயக்காரவை ஜனாதிபதி தனது ஆலோசர்களாக நியமித்துள்ளமை தேர்தல் விதிமுறைகளிற்கு முரணானது என தேசிய மக்கள்சத்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களின் நியமனம் ஊடாக ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறிவிட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசவளங்கள் துஸ்பிரயோகம்
தேர்தல் காலத்தின் போது புதிய நியமனங்களிற்கு தடை விதித்து தேர்தல் ஆணைக்குழு உத்தரவை வெளியிட்டுள்ளது, இந்த நிலையில் ஆணைக்குழுவின் உத்தரவை ஜனாதிபதி மீறியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் முன்னைய அமைச்சுகளின் ஆலோசகர்களாக ஜனாதிபதி அவர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் அவர்கள் அந்த அமைச்சுகளின் நடவடிக்கைகளில் தலையிடலாம், ஊதியம் பெறலாம்,வாகனங்களை பெறலாம் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்துகின்றனர்,அகிலவிராஜ் உட்பட பலருக்கு ஆலோசகர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது,
எனவே ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசவளங்களை துஸ்பிரயோகம் செய்கின்றார்,என அனுரகுமார திசநாயக்க மேலும் தெரிவித்தார்.