நாட்டின் பல பாகங்களில் திடீரென முளைத்த புதிய சோதனைச் சாவடிகள்!
நாட்டின் பல பாகங்களில் புதிய சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அதிருப்தி அடைந்துள்ளது.
கொழும்பில் இன்று (16) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட விருந்த நிலையிலேயே சோதனைச் சாவடிகள் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வாறு அவசரமாக, புதிதாக சோதனைச் சாவடிகள் அமைப்பதற்கான தேசிய அச்சுறுத்தல்தான் என்னவென ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
இதேவேளை , கொழும்புக்கு வரும் தனியார் பஸ்கள் அனைத்தும், சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
மேலும் குறித்த சோதனைச் சாவடிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.