இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்
இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார்.
இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
I have accepted the letter of resignation tendered to me by the CEB Chairman Mr MMC Ferdinando. Vice Chairman Nalinda Ilangaokoon will take over as the New Chairman CEB.
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 13, 2022
அதேவேளை இந்தியப் பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாகக்கூறிய இலங்கை மின்சார சபை தலைவர் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் , எம்.எம்.சி பெர்டினாண்டோ பதவி விலகியதை அடுத்து இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.