இரட்டை குழந்தைகளிற்கு தாயாகும் நயன்தாரா! வியப்பில் ரசிகர்கள்
இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்த போஸ்டால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்த போட்டோக்களை அதிகம் வெளியிட்டிட்டு வந்தனர்.
அதே சமயம் தங்களது வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்திலும், ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.
மேலும், புதிய படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார். தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தி ரௌடி பிக்சர்ஸ் சார்பாக திரைப்படங்களை தாயரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
Nayan & Me have become Amma & Appa❤️
— Vignesh Shivan (@VigneshShivN) October 9, 2022
We are blessed with
twin baby Boys❤️❤️
All Our prayers,our ancestors’ blessings combined wit all the good manifestations made, have come 2gethr in the form Of 2 blessed babies for us❤️?
Need all ur blessings for our
Uyir?❤️& Ulagam?❤️ pic.twitter.com/G3NWvVTwo9
இந்நிலையில், அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டு போட்டோவுடன் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் திருமணமாகி 4 மாதங்களில் எப்படி குழந்தை என திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து எதுவும் விக்னேஷ் சிவன் விளக்கமளிப்பாரா எனவும் எதிர்பார்த்து காத்துள்ளனர். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.