இருமலால் தினம் கஷ்டப்படுகிறீர்களா? சளியை நீக்கும் இயற்கை மருத்துவம்!
பருவ மாற்றத்தால் ஏற்படும் வைரஸ் தொற்று நோய்களுள் சளி, இருமல் பிரதானமானவையாகும்.
வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும்போது சுவாச மண்டலங்களில் தொற்றுக்கள் ஏற்படும் போதுதான் தீராத சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இவை ஏற்படும் முன்னர் இயற்கையான முறையில் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
1.துளசி
துளசியை இஞ்சியுடன் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல வைத்து பின் அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர சளி, இருமல் தொல்லை சரியாகும்.
துளசியை டீ போல செய்து குடித்து வரலாம்.
2. தேன்
இனிப்பு சாப்பிட்டால் சளி, இருமல் அதிகமாகும் என்று சொல்வார்கள்.
ஆனால் தேன் எடுத்துக் கொள்வது சளி. இருமலைக் குறைக்கும் வேலையைச் செய்யும்.
ஒரு ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து காலை, இரவு என இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வர சளி, இருமல் கட்டுக்குள் வரும்
3.இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கின்றன. இந்த இலவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ளும்போது நோயெதிர்ப்பு ஆற்றல் பலப்படும்.
இலவங்கப்பட்டையின் பொடியுடன் தேன் கலந்து எடுத்துக் கொண்டாலும் சளி, இருமல் பிரச்சினை குறையும்
. இலவங்கப்பட்டை பொடியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு டம்ளராக சுண்டவிட்டு டீயாக எடுத்துக் கொள்ளும்போது சளி, இருமல், காய்ச்சல் தீருவதோடு நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
4.சீந்தில் கொடி
சீந்தில் பல நூறு நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது. இந்த சீந்தில் கொடியை பயன்படுத்தி சளி. காய்ச்சல். வைரஸ் தொற்றுக்கள் பருவ கால தொற்று நோய்களைத் தீர்க்க முடியும்.
சீந்தில் கொடியின் சாறை உட்கொள்வதன் மூலம் பருவ கால தொற்றுக்களால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும்.