தேசிய கண் வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளை நாளை (24-04-2023) தொடக்கம் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில், கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பல நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதால், அங்கு அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிக்கல்களை ஏற்படுத்திய மருந்து பாவனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தேசிய கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகளை நாளை (24-04-2023) தொடக்கம் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.