நடிகர் விஜய் மீது தேசகுற்ற வழக்கு ? பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சட்டத்திற்கு புறம்பான மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பான சின்னங்கள் பதிக்கப்பட்டு இருப்பதை கண்டித்து நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றையதினம் (22) சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியதுடன், கொடிப் பாடலையும் அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.
இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது
கட்சி கொடியில் மேலும் கீழும் ரத்தச் சிவப்பு நிறமும், மையப் பகுதியில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றுள்ளன. கொடியின் நடுவில் வாகைப்பூவும் அதன் இருபுறமும் காலை உயர்த்திய இரு போர் யானைகளும், 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றிருந்தன .
இந்நிலையில் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் முறைப்பாடு அழித்துள்ளதாக கூறப்படுகின்றட்து. அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார்.
அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரளா மாநிலத்தின் போக்குவரத்து கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம் பெற்றுள்ளது.
அதோடு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் நிறமும், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறமும், ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூவின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார்.
இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருப்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் பதிலளிக்க தவெக முடிவெடுத்துள்ளதாகவும், கொடியில் வண்ணங்கள், அதில் இடம்பெறும் விஷயங்களை அமைக்க கட்சிக்கு உரிமை உள்ளதாகவும் தவெக தரப்பு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.