பரபரப்புக்கு மத்தியில் அனுராதபுரம் சிறைக்கு செல்லவுள்ள நாமல் ராஜபக்ஸ!
அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக இன்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் புகுந்து தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருத்தி அமைச்சர் லொஹான் ரத்வத்தே கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அமைச்சரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
அமைச்சர் நாமலின் இன்றைய விஜயம் தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோளுக்கு அமைய இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
அமைச்சர் நாமல் இதன்போது அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வார் எனவும் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.