நல்லூரானை தரிசிக்க வந்தவர்களின் பேருந்து தீப் பற்றியதால் பரபரப்பு; கந்தன் அருளால் தப்பிய உயிர்கள்
நல்லூர் ஆலயத்திற்கு சுற்றுலா வந்தவர்களின் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தமையால் , சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தென்னிலங்கையில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள் , நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பேருந்தினை நிறுத்தி விட்டு , நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.
கந்தன் அருளால் தப்பிய உயிர்கள்
சாரதி பேருந்தில் இருந்த நிலையில் , திடீரென பேருந்து தீ பற்றியுள்ளது.
விரைந்து செயற்பட்ட சாரதி தீயினை அணைக்க முற்பட்ட வேளை அது பயனளிக்காத நிலையில் ,அவ்விடத்தில் நின்றவர்கள் , யாழ் . மாநகர சபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர்.
தீயணைப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் , பேருந்தினுள் தீ பெருமளவுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது.