நாடாளுமன்றில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குழு
பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது துணைவி மீனாட்சி நாராயணன் ஆகியோர் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அலுவலகத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை சந்தித்தனர்.
அமைச்சர்களான ஹர்ஷன நாணயக்கார, சரோஜா போல்ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இலங்கையின் கலைத்துறைக்கு இந்திய தரப்பின் பங்களிப்பு மற்றும் முதலீடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு முடிந்தளவு ஒத்துழைப்புகளை வழங்குமாறு அமைச்சர் சந்திரசேகரன் கோரிக்கை விடுத்தார். கலைத்துறை சார்ந்த விடயங்களில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.