மதுபோதையில் கொலை; 23 மற்றும் 28 வயதுடைய இருவர் கைது
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவின் கெடபுலாவ பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரண்டு நபர்களால் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நாவலப்பிட்டி - கெடபுலாவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதலுக்குள்ளான நபர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கெடபுலாவ பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.