முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் அவலநிலை; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்!
முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலம் காணப்படுகின்றது.
இந்நிலையில் வட்டுவாகல் பாலம் எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றதாக விசனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு மட்டுமே செய்யப்பட்டு வருகின்றதாகவும் நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் பாரிய குழி
அத்துடன் தற்போது பாலத்தின் மையப்பகுதியில் உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றது.
ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்களும் வீதி பாதுகாப்பு அற்றதாகவும் வீதியில் சில இடங்களில் தாழிறங்கியும் காணப்படுகிறது.
இது தொடர்பில் பலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் இனி வரும் காலம் மழையுடன் கூடிய காலமாகையால் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தை மேவி செல்வதோடு, கனரக வாகனங்களும் பலத்தின் மேல் பயணிக்கையில் பாலம் மேலும் உடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கனவமெடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.