தமிழர் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்... இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 3 மணி அளவில் பாலிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரு வீடுகளுக்குள் வாள்களுடன் நுழைந்த குழுவினர் குறித்த வீட்டில் இருந்த இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த இருவரும் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.