முல்லைத்தீவு நீதிபதி இராஜினாமா; கண்டன போராட்டத்திற்கு அழைப்பு
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கண்டன போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இக் கண்டனப் போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையன்று (02) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சியில் போராட்டம்
திங்களன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக நடைபெறவுள்ள இந்த கண்டன எதிர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கபட்டுள்ளது.
குருந்தூர் மலையின் இருப்பையும், அங்கு தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கான உரிமையையும் பெற்றுக்கொடுத்ததில் ஆரம்பித்து, தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை நடாத்துவதற்கு அனுமதித்ததற்காகவும் சிங்கள கடும்போக்குவாதிகளால் பழிவாங்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்களுக்கு ஏற்பட்ட இந்நிலை, தமிழினம் சார்ந்து சிந்திக்கின்ற, நியாயத்திற்காக கடமையாற்றுகின்ற இன்னுமோர் தமிழ் நீதிபதிக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.