கணவனை கள்ளக்காதலுடன் இணைந்து அடித்துக் கொன்ற மனைவி! நீதிமன்றம் அதிரடி
முன்னாள் போராளி நடராசா தனராஜ்ஜின் கொலையின் சந்தேக நபர்களான அவரின் மனைவி மற்றும் கள்ள காதலனை தடுப்பு காவல் வைத்து விசாரிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தின் சந்தேக நபர்களயான இருவரையும் கைது செய்து நேற்று பிற்பகல் (18-12-2021) முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் பொலிஸார் முற்படுத்தினர்.
இதன் போது எதிர்வரும் புதன்கிழமை (22.12.2021) வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள பொலிஸாரும் மன்று அனுமதி வழங்கியுள்ளது.
தன் கணவனை முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் கள்ளக் காதலனுடன் இணைந்து, அடித்து கொன்ற மனைவி நேற்று முன்தினம் பொலிஸார் கைது செய்திருந்தனர். கள்ளக்காதலனையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த 09.12.2021 அன்று இடம்பெற்றுள்ளது. நேன்றைய தினம் இச்சம்பவம் தொடர்பில் (18.12.2021) சான்று பொருட்களையும் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்த மேலதிக தகவலுக்கு...