வவுனியாவில் போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸாருக்கு நேர்ந்த நிலை!
வவுனியாவில் போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸாரை மோட்டர் சைக்கிள் ஒன்று மோதியதில் பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் நேற்றிரவு (16-07-2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாண்டிக்குளம் பகுதியில் வீதிக் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் வீதியால் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை வீதியின் குறுக்காக சென்று வழிமறித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் சைக்கிள் போக்குவரத்து பொலிஸாருடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் போக்குவரத்து பொலிஸார் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மோட்டர் சைக்கிளின் சாரதி வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.