போரின் வடுக்களுடன் 13 வருடங்கள் சன்னங்களோடு சக்கர நாாற்காலியில் வாழும் தாய்
ஈழப்போரானது தமிழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நிலையில் இன்னும் போரின் வடுக்கள் எம்மண்ணில் வாழும் மக்களைவிட்டு மாறாதுள்ளது. உடலில் எந்த குறையும் இல்லாத மனிதர்களே பலநேரம் பல உடல் உபாதைகளால் அவஸ்தைபட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், 13 வருடங்கள் சன்னங்களோடு சக்கர நாாற்காலியில் வாழும் தாய் ஒருவரின் துன்பவியல் வாழ்வை சுமந்ததாக இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
அவர்கள் படும் துன்பங்கள் பல வெளிஉலக மக்களுக்கு குறிப்பாக புலம் பெயர் தேசத்தில் வாழும் நம் வளரும் சந்ததிகள் ,அறிந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் வெளிநாட்டில் இருக்கின்றோம். அம்மாவும் அப்பாவும் இலங்கை தமிழர்கள் என்பது மட்டுமே அவர்களுக்கு தெரிந்ததாக உள்ளது.
தம் பெற்றோர்கள் தாங்கள் பிறந்த மண்ணைவிட்டு ஏன் இன்னொரு நாட்டிற்கு வந்தார்கள் என்பதனை அவர்களுக்கு பெரும்பாலும் யாரும் சொல்வதில்லை. இலங்கையில் அம்மம்மாவோ, அப்பம்மாவோ அல்லது சொந்தகார்களோ இருக்கின்றார்கள் என்பது மட்டுமே அவர்களுக்கு தெரிந்ததாக உள்ளது.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட எம் சந்ததிகள் அந்த எச்சங்களுடன் இன்னும் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் துன்பவியல் வாழ்வையும் புலம் பெயர்வாழ் நம் வளரும் சந்ததிகள் அறிந்துவைத்திருக்க வேண்டும்.