பச்சிளம் குழந்தைக்கு தாய் அரங்கேற்றிய கொடூரம் ; பகீர் கிளப்பிய பிரேத பரிசோதனை அறிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பிறந்து 42 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய் கைது செய்தனர்.
பெண் குழந்தை பிறந்ததால் மாமியார் தொடர்ந்து திட்டி வந்ததால் குழந்தையின் சுவாச குழாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தையை கொன்ற பெனிட்டா ஜெய அன்னாவை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கார்த்திக் (21), பெனிட்டா ஜெய அன்னா (20) இருவரும் ஒரு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். குழந்தை பிறந்ததும் தன்னிடம் கணவர் அன்பு காட்டவில்லை எனவும் பெனிட்டா ஜெய அன்னா வாக்குமூலம் அளித்துள்ளார்.
அன்னாளுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் கார்த்திக் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டில் அவருடைய குழந்தை அசைவற்ற நிலையில் கிடந்துள்ளது.
இதுபற்றி மனைவியிடம் கேட்டபோது பாலூட்டிய போது குழந்தை தவறி கீழே விழுந்து காயமடைந்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் குழந்தையை மீட்டு கருங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
விசாரணையில் குழந்தையை கொன்றதை தாய் ஒப்பு கொண்டதுடன் எனக்கு குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆனது. அன்றில் இருந்தே என் கணவர் என் மீது செலுத்தும் அன்பு குறைந்தது.
இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் குழந்தை தான் என்ற ஆத்திரத்தில் சம்பவத்தன்று குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொன்றேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.