தினசரி 3,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள்!
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக தினசரி 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை குடிவரவு - மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி தெரிவித்துள்ளார்.
அதேவேளை , அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரிக்காக, கடவுச்சீட்டுக்களைப் பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,800 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுவான சேவையின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,000 விண்ணப்பங்களும் மேலும் பெறப்படுகின்றதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.