தினம் காலை உணவாக பேரிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டால் ஏற்படும் அசுர நன்மைகள்
காலை உணவாக அனைவரும் பெரும்பாலும் இட்லி மற்றும் தோசை போன்றவற்றை தான் அதிகம் உட்கொள்வார்கள்.
பேரிச்சம் பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. மேலும், பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி3, பி5, ஏ1, சி, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூலப்பொருட்கள் ஏராளமாக உள்ளன. இது மனித உடலின் எலும்பு முறிவை குறைக்கிறது. எலும்புகளுக்கு உறுதியையும் தருகிறது.

தினமும் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வர, எலும்புகள் வலுவிழந்து, சிதைவு போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கிறது. பேரிச்சம் பழத்தில் பல்வேறு அமினோ அமிலங்களும், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்தும் உள்ளதால், தினமும் குடித்து வந்தால், செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தி, செரிமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது.

ஏனெனில் இதில் குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் அதிகம் உள்ளது. மேலும், பேரிச்சம் பழத்தை தினமும் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் சோம்பல் நீங்கி, உடலின் ஆற்றல் அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால் இதனை உட்கொள்வது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், இதனை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவு.