போராட்ட இடத்துக்கு சென்ற பிக்குகள் விரட்டியடிப்பு! (Video)
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட தேரர்கள் சிலர் போராட்டகாரர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரதன தேரர் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு சிங்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு வருகைத் தந்த வேளை அவர் மீது ஆத்திரமடைந்த மக்கள் அந்த இடத்தில் இருந்து அவரை விரட்டியுள்ளனர். அத்துடன் இதன்போது அவருக்கு பேசுவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்க பொதுமக்கள் மறுத்துள்ளனர்.
இதன்போது பொதுமக்கள் கூறுகையில்,
உங்களை போன்றவர்கள் காரணமாகவே நாங்கள் இன்று துன்பத்திற்கு உள்ளாகி இருக்கின்றோம், தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள், வணங்கி கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் இந்த இடத்தை விட்டு செல்லுங்கள்.
"It is because of the people like you, we suffer today like this"
— Kavinthan (@Kavinthans) April 4, 2022
Battaramula Seelarathna thero, who came to take part in a protest in Battamurala has been chased away by the people engaged in the protest. #SriLanka pic.twitter.com/jwZfuJm3Uh
இங்கு சாதாரண மக்களே இருக்கின்றனர். கொள்ளை கூட்டம் ஒன்றுக்கு வாக்களித்து, தற்போது எமக்கு சமையல் எரிவாயு இல்லை.நீங்கள் தற்போது பேசி பயனில்லை இங்கிருந்து தயவு செய்து செல்லுங்கள்.
இந்த நிலைமைக்கு மிக முக்கிய காரணமே நீங்கள் தான். இங்கிருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை கோட்டாபயவை பதவியில் இருந்து வெளியேற்றவே தான் வந்ததாக தேரர் கூறிய போதிலும், போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, பத்தரமுல்லே சீலரதன தேரர் அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.