மீண்டும் பிரதமராகும் மோடி ; யாழ்ப்பாணத்தில் வைரவருக்கு தேங்காய் உடைப்பு!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில் மீண்டும் இந்தியாவின் பிரதமராகின்றார் நரேந்திரமோடி.
இந்தநிலையில் மோடியின் வெற்றியை இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகள் இணைந்து யாழ்ப்பாண நகரில் நேற்று மாலை ஆலயத்தில் தேங்காய் உடைத்து விமரிசையாக கொண்டாடின.
வெற்றிக் கொண்டாட்டங்கள்
யாழ். நகரிலுள்ள வைரவர் ஆலயத்துக்கு முன்பாக இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது ஆலயத்தில் கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டன.
மேலும் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு ஆகியன பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் பட்டாசு கொழுத்தியும் மோடியின் வெற்றியைக் கொண்டாடினர்.