லண்டனில் இளம்பெண் மாயம்: கவலையை வெளியிட்ட பொலிஸார்
பிரித்தானியா தலைநகரான லண்டனில் காணாமல் போயுள்ள டீன் ஏஜ் இளம்பெண் குறித்து பொலிஸார் முக்கிய தகவல்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு லண்டனின் ஹேக்னேவை சேர்ந்த ஏஞ்சலினா என்ற இளம்பெண் பெண் காணாமல் போயுள்ளார். அவரின் பாதுகாப்பு குறித்த கவலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண்ணான ஏஞ்சலினா காணாமல் போனார் என அவர் குடும்பத்தார் பொலிஸில் புகார் அளித்த நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறு வருதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அவர் எப்போது இருந்து காணாமல் போனார் என்ற தகவலை பொலிஸார் இன்னும் வெளியிடாத நிலையில் குறித்த இளம்பெண்ணின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ஒரு புகைப்படத்தில் அப்பெண் பள்ளிக்கூட சீருடை அணிந்திருக்கிறார்.
மேலும், வீட்டில் இருந்து காணாமல் போன ஏஞ்சலினா தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.