மிரள விட்ட பாரிய கஞ்சா கடத்தல்காரரின் சட்டவிரோத சொத்துக்கள்
நாட்டின் பாரிய கஞ்சா கடத்தல்காரர் எனப்பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கும் எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த ஜே.ஏ. ஜெயசிங்க எனப்படும் 'பத்தல ஹீன்மஹத்தயா' என்பவருக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நேற்று (28) பறிமுதல் செய்தது.
எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலை எதிரே அமைந்துள்ள மருந்தகத்தைக் கொண்ட ஒரு கட்டிடமும், சந்திரிக்கா வெவாவுக்கு எதிரே அமைந்துள்ள ஒரு ஹோட்டலும் இதில் அடங்கும்.
இந்தச் சொத்து அந்த நபரின் மனைவியின் பெயரில் வாங்கப்பட்டது, அதற்கான பணம் எவ்வாறு சம்பாதித்தது என்பதை அவர்களால் வெளியிட முடியவில்லை.
அதன்படி, தொடர்புடைய சொத்து 7 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (29) வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.