புதிய அரிசியை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை!
அம்பலாந்தோட்டை அரச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஏ.டி. 378 என்ற புதிய வெள்ளை பச்சை அரிசியை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
13 வருடகால ஆராய்ச்சியின் பின்னர் இது அறிமுகம் செய்யப்பட்டதாக ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷனி சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏக்கருக்கு 180 புஷல் நெல் விளைவிக்கக் கூடிய இந்தப் புதிய நெல் வயலில் ஒரு மூடை நெல் எடை தோராயமாக 21 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, அநுராதபுரம், மாத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் விவசாயிகளுக்கு இந்தப் புதிய நெல் வகை இப் பருவத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் எந்தப் பகுதியிலும் பயிரிட ஏற்றது எனவும் அம்பலாந்தோட்டை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷனி சிறிவர்தன தெரிவித்தார். .