மாத்தறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னணி வெளியானது
மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்த சம்பவம் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலைகளை துபாயில் தலைமறைவாக இருக்கும் 'பாலே மல்லி' என்ற ஷெஹான் சத்சர என்ற குற்றவாளி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகம்
கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் 'பாலே மல்லி' என்ற குற்றவாளிக்கும் இடையிலான தகராறின் விளைவாக இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச்சூடு குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றவியல் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு பேரில் ஒருவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.