இலங்கையில் ஜனாதிபதி அலுவலகத்தை பயன்படுத்தி பாரிய மோசடி! அவசர எச்சரிக்கை
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி பலரை ஏமாற்றி, பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்களே ஏமாற்றி இவ்வாறு பண மோசடி இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான மோசடியாளர்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறான நபர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டால் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரசாத் செனரத் என்ற அதிகாரியை +94 71 530 8032 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு, தகவல் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.