வவுனியா தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து; பல லட்சம்பெறுமதியான பொருட்கள் நாசம்
வவுனியாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று (25) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சாப்பாட்டுக்காக சென்றபோது சம்பவம்
அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலை, வீட்டு தளபாடங்களின் களஞ்சியசாலை என்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தொழில்சாலையில் பணி புரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
விபத்தையடுத்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீர்தாரை வீசி நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் தொழிற்சாலை முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன்இ பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் நாசமாகியுள்ளன.
தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.