பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு
நீதவான் நீதிமன்றத்தில் முடிவடைந்த பெருமளவு போதைப்பொருட்களை, இன்று (27) அழிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த விடயம் புத்தளத்திலுள்ள வனத்தவில்லு எரிப்பு நிலையத்தில் இடம்பெற்றவுள்ளது.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முடிவடைந்த வழக்குகளில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவால் கைப்பற்றப்பட்ட பொருட்களும், நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்கள் பிறப்பித்த அழிப்பு உத்தரவுகளைத் தொடர்ந்து அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களும் இந்தப் பொருட்களில் அடங்குகின்றன.
அத்துடன், அழிக்கும் செயல்முறைக்கு முன்னர், போதைப்பொருட்கள் நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து வனத்தவில்லு எரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.