கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பாரிய ஆர்பாட்டம்!
வீதியில் இறங்கி துறைமுகங்கள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று (03) புதன்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
நேற்று (02) செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (03) புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மின்சார பொறியியலாளர்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள மின் ஊழியர்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.