சிறுமியை வன்புனர்வு செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
கொழும்பு கல்கிசை பகுதியில் 16 வயதான சிறுமியை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு குழந்தைகளின் தந்தையான 37 வயதுடைய ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று (11) அன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதித்துள்ளார்.
தாயுடன் சென்ற சிறுமி
அதோடு , பாதிக்கப்பட்டவருக்கு ரூ.300,000 இழப்பீடு வழங்கவும், அபராதம் மற்றும் இழப்பீட்டை செலுத்தத் தவறினால் குற்றவாளிக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தின் பிரதிவாதி இப்போது இரண்டு மைனர் குழந்தைகளின் தந்தையாக இருப்பதால், தண்டனையை குறைக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்ப்பு கோரிக்கை விடுத்தது.
எனினும் சிறிய தண்டனையை விதிக்க நீதிமன்றத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும், ஆனால் பிரதிவாதியின் சட்டத்தரணி முன்வைத்த வாதங்களின்படி, பிரதிவாதிக்கு முந்தைய தண்டனைகள் அல்லது நிலுவையில் உள்ள பிற வழக்குகள் இல்லாததால், அதிகபட்ச தண்டனையை சட்டத்தால் விதிக்க முடியும் என்றும், நீதிபதி சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் பிரதிவாதியின் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தபோது, அவர் தனது மொபைல் போன் எண்ணைக் கொடுத்து, பின்னர் அவளை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தேசிய அடையாள அட்டை இல்லாத ஒரு மைனர் என்பதை உணர்ந்த ஹோட்டல் நிர்வாகம், அவளுக்கு தங்குமிடம் வழங்க மறுத்தது. இதனையடுத்து , ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.