மகனின் சிகிச்சைக்கு சொகுசு காரில் மதுபானம் கடத்திய நபர்
சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய நபர் ஒருவரை 30 மதுபான போத்தல்களுடன் தொடுவாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வாடகை அடிப்படையில் பெறப்பட்ட சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தி இந்த வியாபாரத்தை மேற்கொண்டுள்ளதுடன், அதற்காக தனது குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகளின் சத்திரசிகிச்சை
சந்தேகநபர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார் , கைது செய்த சந்தர்ப்பத்தில், தனது மகளின் சத்திரசிகிச்சைக்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதற்காகவே மதுபானத்தைக் கடத்தியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மதுபானம் மற்றும் மோட்டார் வாகனத்துடன் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.