யாழில் வேலையில் இருந்த இளைஞன் ; கமராவில் பதிவான காட்சியால் பொலிஸார் அதிர்ச்சி
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இளைஞனின் விரலை துண்டாடிய சந்தேக நபர்களை கடையில் பொருத்தப்பட்டுள்ள் கமராவில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலையில் , களஞ்சிய சாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வருகின்றனர்.
களஞ்சிய சாலைக்குள் அத்துமீறி நுழைந்து வாள் வெட்டு
அந்நிலையில் அவரது மோட்டார் சைக்கிளில் வந்த வாள்களுடன் வந்த இருவர் , களஞ்சிய சாலைக்குள் அத்துமீறி நுழைந்து வேலையில் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வாள் வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில் , இளைஞன் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் , தாக்குதலை நடத்திய இருவரையும் பொலிஸார் இனம் கண்டுள்ள நிலையில் ,அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.