திருகோணமலையில் மாயமான சாரதி மயங்கிய நிலையில் மீட்பு
திருகோணமலையில் காணமல் போயிருந்த முச்சக்கர வண்டி சாரதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த முச்சக்கர வண்டி ஓட்டி வந்த சாரதி திருமலை வைத்தியசாலை தரிப்பிடத்திலிருந்து கடந்த (26) திங்கட்கிழமை முதல் காணாமல் போயிருந்தார்.

உடலில் காயங்களுடன் மீட்பு
காணாமல் போன நபர் ABM 7094 என்ற இலக்கப் பதக்கத்துடன் கூடிய முச்சக்கர வண்டியின் ஓட்டுனரான ஜெயக்குமார் என்பவராவார்.
இந்நிலையில் குறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை (27) நொச்சிகுளம் பகுதியில் மயக்கம் அடைந்த நிலையில், உடலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதோடு அவரின் முச்சக்கர வண்டி முழுமையாக சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.