முச்சக்கரவண்டியினுள் ஒருவர் வெட்டிக் கொலை
Ratnapura
Crime
Murder
By Sulokshi
இரத்தினபுரியில் கிரிஎல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டபெத்தாவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டியினுள் வைத்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிரிஎல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் இன்று (18) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்த கிரிஎல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US