யாழில் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் பலி; காரணம் இதுதான்!
யாழில் அதிக மருந்து பாவனையால் இரத்த வாந்தி எடுத்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சம்பவத்தில் வடமராட்சி இமையான் பகுதியை சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் வீட்டில் இரத்த வாந்தி எடுத்துள்ளார்.
உளநோய்க்கு மருந்து
இதனையடுத்து , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அதிகளவான மருந்து பாவனையால், உயிரிழப்பு ஏற்பட்டது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதேவேளை உயிரிழந்தவர், கடந்த 08 மாத காலமாக உளநோய்க்கு உள்ளான நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று அதற்கான மருந்துகளை பாவித்து வந்தவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.