புத்தளத்தில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! பரபரப்பு சம்பவம்
புத்தளத்தில் உள்ள மதுரங்குளி களப்பு பகுதியிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (22-01-2024) பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸாரும், புத்தளம் தடவியல் பொலிஸாரும் இணைந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
களப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம், நீதிவான் விசாரனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.