முச்சக்கரவண்டி ஒன்றில் பெருமளவு பெற்றோலுடன் ஒருவர் கைது
பண்டாரகம நகரில் முச்சக்கரவண்டி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைக் கொண்டுச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து சுமார் 25,000 ரூபாய் பெறுமதியான 80 லீட்டர் பெற்றோலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணை
பண்டாரகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் குறித்த எரிபொருள் தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக அட்டுலுகம பகுதிக்குக் கொண்டு சென்றமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஈரான் போர் குறித்து வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் ; முக்கிய புள்ளியின் ராஜினாமாவால் ட்ரம்பிற்கு பேரிடி
கைது செய்யப்பட்டவரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.