உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய நபர் விமான நிலையத்தில் கைது
இந்தியாவிற்கு செல்லவிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மும்பைக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு போதே சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது.
சுமார் 2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 03 கெப்ஸியூல்களை கடத்திச் செல்லும்போதே நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்
அந் நபர் கொழும்பு வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 29 வயதான முச்சக்கரவண்டி சாரதி என தெரிய வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (18) மாலை 04.05 மணியளவில் இந்தியாவின் மும்பை விமானத்தில் செல்வதற்கு நபர் அங்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்டபோது அவரது உடலில் மறைத்து வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.
இந்த தங்க ஜெல் கரைசலை தங்கமாக மாற்றும் தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் மட்டுமே உள்ளதாக சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்க ஜெல் கரைசல் அடங்கிய கெப்ஸியூல்கள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வளாகத்தில் உள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரண அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட நபர் இன்றைய தினம் (19) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.