நீளமா முடி வளர இந்த கருவேப்பிலை ஹேர் ஆயில் வீட்டில் எப்படி செய்வது தெரியுமா?
உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமில்ல தலைமுடியை ரொம்ப வேகமா, கருகருனு கொத்தா கொத்தா வளர வைக்கிற ஆற்றல் இந்த கறிவேப்பிலைக்கு இருக்கு என உங்களுக்கு தெரியுமா?
எவ்வளவு முடி கொட்டினாலும் அதை உடனே நிறுத்தி நிறைய அடர்த்தியான, நீளமா புது முடியை வளர வைக்க கறிவேப்பிலையோடு இன்னும் ரெண்டு பொருள் சேர்த்து இந்த கறிவேப்பிலை ஹேர் ஆயில் எப்படி பண்வது என்று நாம் இங்கு பார்ப்போம்.
கறிவேப்பிலை நம்மைப் பொருத்தவரையில் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு வாசனை மூலிகை. ஆனால் அதில் எவ்வளவு வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கொட்டிக் கிடக்குனு தெரியுமா உங்களுக்கு?
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை அழிப்பதோடு முடியின் வளர்ச்சியையும் சேர்த்து ஊக்குவிக்கும்.
கறிவேப்பிலையில் உள்ள புரோட்டீன், பீட்டா கரோட்டீன் மற்றும் அல்கலாய்டுகள் உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதோடு உச்சந்தலையை நன்கு மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.
இயற்கையாக வீட்டில் கிடைக்கும் இந்த கறிவேப்பிலை முடியின் நிறத்தை நன்கு கருமையாகவே வைத்திருக்கும். முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். முடி மெலிதாக தின்னாக இருப்பதை மாற்றி திக்காக மாற்றும் தன்மை கொண்டது.
கறிவேப்பிலை ஹேர்ஆயில் செய்வது எப்படி?
தேங்காய் எண்ணெய் - 1 கப்,
கறிவேப்பிலை - 1 கப் (கழுவி ஈரமில்லாமல் துடைத்தது),
நெல்லிக்காய் - கால் கப் (நறுக்கியது),
வெந்தயம் - 2 ஸ்பூன்,
இவற்றில் கறிவேப்பிலையை நன்கு காம்புகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஈரம் எதுவும் இல்லாமல் நன்கு சுத்தமான காட்டன் துணியால் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நெல்லிக்காயை விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்போது எண்ணெய் செய்ய எல்லா பொருள்களும் தயார்.
முதலில் ஒரு இரும்புக் கடாயில் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து அதில் வெந்தயம், கறிவேப்பிலை, நெல்லிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
இந்த கடாயை அப்படியே அடுப்பில் எடுத்து வைத்து மெல்லிய தீயில் சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். நன்கு எண்ணெய் சூடானதும் அதில் போட்ட பொருள்கள் அனைத்தும் பிரௌன் நிறத்திற்கு மாறி கடாயின் அடியில் தங்கிவிடும்.
அதுவரை நன்கு காய்ச்ச வேண்டும். பின்பு அடுப்பை அணைத்துவிட்டு ஓரு நாள் முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். அடுத்த நாள் அதை எடுத்து நன்கு வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து பயன்படுத்தத் தொடங்கலாம்.