தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்கிய மைத்திரிபால
2008 ஆம் ஆண்டில் கொழும்பு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (28) ஆஜராகி சாட்சியளித்துள்ளார்.
வழக்கின் முதலாவது சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால பெயரிடப்பட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் நோக்கத்தில் 2008 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்றைய தினம் (28) விசாரணைக்கு எடுத்துக்கொளள்ப்பட்டது.
வழக்கின் முதலாவது சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகி சாட்சியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.