ராஜபக்க்ஷ அரசாங்கத்தை கடுமையாக சாடும் மைத்திரி
அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீது, ஆளும் தரப்பினரே பொய்யான குற்றச்சாட்டுகளை கடுமையான முறையில் முன்வைக்கின்றதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதேவேளை , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருந்தால்தான் அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரக் கட்சியின் மீது சேறுபூசும் செயற்பாடுகள் பாரதூரமானவை என்றும் நினைவூட்டிய மைத்திரி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 பேர், அரசாங்கத்துக்குள் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் , தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுந்தொனியில் பதிலளித்ததாகவு ம் கூறப்படுகின்றது.