பிரதமர் மஹிந்தவின் தனிப்பட்ட வங்கி கணக்கு விவகாரம்: வெளிவரும் தகவல்கள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முறைப்பாடு செய்யப்படவில்லை.
இவ்வாறு கொழும்பு ஆங்கில் ஊடகம் ஒன்றிடம் பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
இவ்வாறான ஒரு சம்பவம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை. இதேவேளை சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் “எனக்குத் தெரிந்த வகையில் தவறானவை” என்றார்.
எனினும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தந்தையின் வங்கிக் கணக்கு சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியாது என நேற்று (26-01-2022) செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சம்பவம் வெளிச்சத்துக்கு வரவில்லை, நடக்கவில்லை என்றும், ஊடகங்களில் வெளிவந்த செய்திகளைப் பார்த்த பிறகுதான் தமக்கே தகவல் தெரிவித்ததாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது