என்னை ஜனாதிபதியாக நியமித்தது அரிசி, பருப்பின் விலையை பார்த்துக் கொள்ளவா? ஜனாதிபதி காட்டம்
என்னை ஜனாதிபதியாக நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலைகளை பார்த்துக் கொள்வதற்கு என்றால் அதற்கு நான் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று விவசாய பண்ணை ஒன்றை பார்வையிட சென்ற போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார். "எங்களது முந்தைய அரசாங்கங்கள் கூட இதைச் செய்ய முயற்சித்தன. இது கடினமான பணி.
எனது முன்னோர்களுக்கு தெரியும் பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று. ஆனால் துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார். அதோடு என்னை நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலையைப் பார்த்துக் கொள்வதற்காக என்றால் அதற்கு நான் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காகவே , விசேடமாக இந்த விவசாயத் துறை தொடர்பில் முதல் உரத்தை இலவசமாக வழங்கியதாகவும் அவர் கூறினார்.
உண்மையில் விவசாயியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே இலவசமாக வழங்கப்பட்ட போல், நெல்லின் உத்தரவாத விலையையும் அதிகரித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.