உள்ளூர் அழகு சாதன உற்பத்தி நிலையங்கள் மூடும் அபாயம்
உள்ளூர் அழகு சாதன உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது செஸ் வரி நீக்கப்பட்டதன் காரணமாக இந்த நிலை என இலங்கை அழகு சாதன உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதனால் 50,000க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் ஷாம்பு, ஷவர் ஜெல், க்ரீம் போன்ற சொகுசு பொருட்கள் சுங்க வரியின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும்.
மேலும் வெளிநாட்டு நிறுவனங்களும் உற்பத்தியாளர்களும் பயன் பெறுவார் என்றும்,குறித்த அழகு சாதாரண பொருட்களின் விலைகள் குறையும் என்றும் சங்கத்தின் தலைவர் சேனக சமரசிங்க தெரிவித்தார்.